"விளையாட்டுத்தனமா பண்ணது விபரீதம் ஆயிடுச்சு!"- தொகுப்பாளருக்கு மாலை போட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்! வீடியோ இதோ

தொகுப்பாளருக்கு மாலை போட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்,cool suresh apologises for forcefully garlanded to anchor | Galatta

நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளிவர இருக்கும் சரக்கு திரைப்படத்தின் பட விழாவில் கலந்துகொண்ட நடிகர் கூல் சுரேஷ் தொகுப்பாளருக்கு மாலை போட்டது பெரும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்த நிலையில் அது குறித்து நடிகர் கூல் சுரேஷ் தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராகவும் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நடிகராகவும் திகழும் மன்சூர் அலிகான் அவர்கள் விரைவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதனிடையே தனது சொந்த தயாரிப்பில் சரக்கு எனும் திரைப்படத்தை மன்சூர் அலிகான் அவர்கள் தயாரித்து நடித்திருக்கிறார். 

இந்த சரக்கு படத்தில் வலீனா, யோகி பாபு, இயக்குனர் கே.பாக்கியராஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ்.T இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் சரக்கு திரைப்படத்திற்கு தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைத்திருக்கிறார். கனல் கண்ணன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனங்களை எழுச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். இந்த நிலையில் சரக்கு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். இதில் நடிகர் கூல் சுரேஷ் விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். 

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மேடையில் பேச வந்த நடிகர் கூல் சுரேஷ் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் தொகுப்பாளனிக்கு அனுமதியின்றி போட்டுவிட்டார். திடீரென நடிகர் கூல் சுரேஷ் செய்த இந்த செயலால் தொகுப்பாளனி மிகுந்த எரிச்சல் அடைந்து அடுத்த நொடியே மேடையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.  மேலும் விழா மேடையில் இருந்த பிரபலங்களும் நிருபர்களும் கூல் சுரேஷின் செயலை கண்டித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். மன்சூர் அலிகான் அவர்கள் மேடையிலேயே கூல் சுரேஷின் அந்த செயலை கண்டித்து மன்னிப்பு கேட்க வைத்தார். அதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டதன் பேரில் கூல் சுரேஷ் மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நடிகர் கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “அந்த விழாவை தொகுத்து வழங்கிய பெண்ணுக்கு நான் மாலை போட்டு விட்டேன். ஒரு பெண்ணிற்கு நான் மாலை போட கூடாதாம் அது எனக்கு மாலையை போட்ட பிறகு தான் தெரிந்தது. அந்தப் பெண் அவரது பெயர் தெரியவில்லை அவரிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நேற்று நான் விளையாட்டுத்தனமாக செய்தது அடுத்தவர்கள் முகம் சுழிக்கும் படியாக ஆகிவிட்டது. மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் தான் இருக்கிறேன். அந்த சம்பவத்திற்கும் அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அறியாமல் செய்துவிட்டேன் விளையாட்டுத்தனமாக செய்தேன் அது வேறு மாதிரி பூகம்பம் மாதிரி ஆகிவிட்டது. எது நடந்திருந்தாலும் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். நடிகர் கூல் சுரேஷ் பேசிய அந்த வீடியோ இதோ…