“அவருக்கு இதை செஞ்சா தான் ஆத்மா சாந்தி அடையும்” மயில்சாமி மறைவு குறித்து ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு – முழு நேர்காணல் உள்ளே..

மயில் சாமி நட்பு குறித்து மனம் திறந்த ராகவா லாரன்ஸ் - Raghava Lawrence about Mayilsamy | Galatta

தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் மாஸ் திரைப்படங்களை கொடுத்து மக்களை படத்திற்கு படம் குதூகலத்தில் வைத்திருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக தென்னிந்திய திரையுலகில் புகழ் கட்டி பறந்து இயக்குனாராகவும் நடிகராகவும் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான ராகவா லாரன்ஸ் இன்று பாலிவுட் வரை சென்று படம் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், அதிகாரம் மற்றும் லோகேஷ் கனகராஜ் எழுத்தில் ரத்னா இயக்கவிருக்கும் புதிய படம் என்று பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில் தனது சூப்பர் ஹிட் திரைப்படமான காஞ்சனா படத்தின் நான்காவது பாகத்திற்கான கதையையும் எழுதி வருகிறார்.

இதனிடையே தயாரிப்பாளரும் இயக்குனருமான கதிரேசன் இயக்கத்தில் மாஸ் என்டர்ட்டேயின் திரைப்படமாக உருவாகி கடந்த ஏப்ரல் 14 ம் தேதி ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவனாக வலம் வந்த மறைந்தா மயில் சாமி அவர்கள் குறித்து ராகவா லாரன்ஸ் பேசியது,

"நல்ல பக்தனை இழந்த உணர்வு. சாமியை பற்றி உணர்ந்தால் மட்டும் தான் பேச முடியும். நான் அவர்கூட 2 மணி நேரத்திற்கு மேல் அண்ணாமலையார் பற்றி பேசிக் கொண்டிருப்போம். அது பற்றி பேச தொடங்கினாலே அவர் அவ்ளோ சந்தோஷமாகிடுவார்.  

அதே மாதிரி எம் ஜி ஆர்  சார் உடைய புகைப்படம் நிறைய எனக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். யாருக்காவது கஷ்டம் னாலும் உடனே என்னை அழைத்து கேட்பார். அவர் உதவி கேட்கும்போதும் அவருக்கு உதவி கேட்பது போல் கேட்பார்.  ஒரு உரிமை இருக்கும்.  அவர் இறக்கும் போது நான் ஹைதராபாத்தில் இருந்தேன். இவ்ளோ சீக்கிரம் அவர் இல்லாமல் போனது எனக்கும் மட்டுமல்ல எல்லோருக்குமே அது ஷாக் தான். அவர் நல்லது பண்ணனும் நினைச்சத நம்ம சேர்தது பண்ணிடலாம். அப்போதான் அவர் ஆத்மா சாந்தி அடையும். " என்றார் ராகவா லாரன்ஸ்.

மயில் சாமி ராகவா லாரான்ஸ் நடிப்பில் பல படங்கள் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது குறிப்பாக பாண்டி, காஞ்சனா 1,2, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருந்து வருகிறது.

மேலும் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் தான் கடந்து வந்த பாதைகள், அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து பல அட்டகாசமான தகவல்களை நமது கலட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் ரசிகர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்ட முழு நேர்காணலை காண..  

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’ பட வெற்றியை வித்யாசமாக கொண்டாடிய படக்குழு.. – குவியும் வாழ்த்துகள்.. விவரம் உள்ளே..
சினிமா

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’ பட வெற்றியை வித்யாசமாக கொண்டாடிய படக்குழு.. – குவியும் வாழ்த்துகள்.. விவரம் உள்ளே..

மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் நண்பன் பட நடிகை இலியானா.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் நண்பன் பட நடிகை இலியானா.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள் – வைரலாகும் பதிவு இதோ..

சினிமா

"பேச்சை குறை வேலைய பாரு.." தோல்வி படங்களில் நடித்தது குறித்து நடிகர் விமல் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - அட்டகாசமான நேர்காணல் இதோ..