சிறார் ஆபாச படங்களைப் பகிர்ந்த மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 

three Madurai youths arrested for pornography

இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனம் ஒன்று, இணையத்தளம் மூலமாக ஆபாச படம் பார்ப்பவர்கள் பற்றி நடத்திய ஆய்வில், இந்தியாவில் தான் அதிகம் பேர் ஆபாசப்படம் பார்ப்பதாகத் தெரியவந்தது. 

குறிப்பாக, தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலானோர் ஆபாச படம் பார்ப்பாகவும், அதிலும் குறிப்பாக, சென்னையைச் சேர்ந்தவர்கள் தான், அதிகமாக ஆபாசப் படம் பார்ப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை கூறியது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, தமிழக அரசைக் கேட்டுக்கொண்ட நிலையில், இணையத்தளம் மூலம் ஆபாசப் படம் பார்த்த பட்டியலைத் தமிழக போலீசார் தொடர்ந்து தயார் செய்து வருகின்றனர்.

இதனிடையே, திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர், முதன் முதலாகக் கைது செய்யப்பட்ட நிலையில், சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ததாக மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த குமார் என்பவரை, போலீசார் அதிரடியாக தற்போது கைது செய்துள்ளனர்.

அதேபோல், குழந்தைகளின் ஆபாச படங்களைப் பரப்பியது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த 31 வயதான செந்தில்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்ததாக மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஓட்டுநர் சுந்தரபாண்யடின் என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதனிடையே, குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் மற்றும் பரப்பியது தொடர்பாக, மதுரையில் 2 நாட்களில் 3 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.