சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த பிரிவு 1 அந்தஸ்து! விவரம் உள்ளே

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த பிரிவு 1 அந்தஸ்து! விவரம் உள்ளே - Daily news

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரிவு 1 உயர் ரக அந்தஸ்து கிடைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கடந்த 1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான கல்வியை வழங்கி வருகிறது. பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், சட்டம், பல் மருத்துவம், மருந்தகம், செவிலியர், மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட கல்வித் திட்டங்களை வழங்குகிற சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் UGC சட்டம், 1956 இன் பிரிவு 3 இன் கீழ் நிறுவப்பட்டது மற்றும் தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சிலால் 'A++' கிரேடுடன் அங்கீகாரம் பெற்றது.

இந்த தலைசிறந்த கல்வி நிறுவனத்தின் வேந்தராக டாக்டர் மரியசீனா ஜான்சன்,அவர்கள் பதவி வகிக்கிறார். மேலும் தலைவராக டாக்டர் மேரி ஜான்சன், துணைத் தலைவர்களாக ஜே. அருள் செல்வன், செல்வி மரிய பெர்னாட் தமிழரசி, மரியா கேத்தரின் ஜெயப்பிரியா ஆகியோர் தலைமையில் இருந்து சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை இயக்கி வருகின்றனர்.இந்த நிலையில் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரிவு 1 உயர் ரக அந்தஸ்து கிடைத்துள்ளது. யூஜிசி ஒழுங்குமுறைச் சட்டம் 2018  விதிகளின்படி சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரிவு 1 உயர் ரக அந்தஸ்து  வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வேந்தர் டாக்டர் மரியஜினா ஜான்சன் கூறுகையில்:-
 
“சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் , தொலைநோக்கு பார்வை கொண்ட நிறுவன வேந்தர் டாக்டர் ஜேப்பியார் அவர்களால், திறன்வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் அறம் சார்ந்த ஆற்றல் வாய்ந்த மானுட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வால் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC), நமது கல்வி நிறுவனத்துக்கு "A++" தரத்தை வழங்கியுள்ளது 2023 ஆம் ஆண்டின் சாதனைகளில் ஒன்று. பல்கலைக்கழக மானியக் குழு, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்விநிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வகை–1 இல் யூஜிசி ஒழுங்குமுறைச் சட்டம் 2018 (தரப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்கும் பல்கலைக்கழக வகைப்படுத்துதல் ) உரிமையின்படி, தரம் உயர்த்தியுள்ள தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பின்னணியில், நமது உயர்கல்வி நிறுவனத்தின் அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்துவதுதோடு, நமது எதிர்க்கால முயற்சிகளுக்கான  உங்களுடைய மேலான ஒத்துழைப்பையும் எல்லையற்ற மற்றும் பயனுள்ள பங்களிப்பையும் இந்த தேசத்துக்கு வழங்க உறுதியேற்போம். நமது நிறுவனத்தின் வெற்றிகரமான இந்த உயரிய பயணத்துக்கு, தளர்வின்றி ஊக்கத்துடன் துணை நின்று ஆதரவளித்து வரும் பெற்றோர்கள், ஆளெடுப்பு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” 

என தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment