நாகர்கோவிலில் மனைவியோடு கள்ளக் காதலன் படுக்கையில் இருந்ததை பார்த்த கணவன், மனைவியை குத்தி கொலை செய்துள்ள சம்பவத்தில், கைது செய்யப்பட்ட கணவன் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்த 42 வயதான நீலாவதி, அதே குதியில் உள்ள பேக்கரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நீலாவதியின் கணவர் ராமதாஸ், அதே பகுதியில் மரக்கடை தொழில் செய்து வந்தார். ராமதாஸ் - நீலாவதி தம்பதிக்கு தற்போது 19 வயதில் அஜித் என்ற மகன் உள்ளான்.   

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, நீலாவதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நெருங்கிப் பழகி வந்த விசயம் கணவர் ராமதாஸ்க்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தனது மகனை அழைத்துக்கொண்டு, நீலாவதி கணவனைப் பிரிந்து தனியாகச் சென்றுவிட்டார். ஆனாலும், இவர்கள் முறைப்படி நீதிமன்றம் சென்று விவகாரத்து வாங்காத நிலையில், உறவினர்கள் மூலமாகப் பேசி பிரிந்து சென்றதாகத் தெரிகிறது.  

கணவன் - மனைவி இருவரும் பிரிந்து சென்ற பிறகு, அவர்களுக்குள் எந்தவித பேச்சு வார்த்தையும் இல்லை. அதே நேரத்தில், மகன் அஜித்துடன் தந்தை ராமதாஸ் தொடர்பில் இருந்துள்ளார். அடிக்கடி வந்து பேசிவிட்டு, நல்லது கெட்டது செய்வதுமாக இருந்துள்ளார். 

இப்படிக் கடந்த 3 ஆண்டுகளாகக் கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணி அளவில் பணி நிமிர்த்தமாக, மனைவியின் வீட்டைக் கடந்து இருசக்கர வாகனத்தில் ராமதாஸ் சென்று உள்ளார். அப்போது, அந்த நேரத்திலும் மனைவியின் படுக்கை அறையில் லைட் எரிந்துகொண்டு இருந்துள்ளது.

அப்போது, கணவர் ராமதாஸ் தனது இருசக்கர வானத்தை அங்கேயே நிறுத்திவிட்டு, வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது, மனைவி நீலாவதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எந்த இளைஞருடன் பார்த்துப் பழகி வந்தாரோ, அந்த இளைஞனுடன் கட்டிலில் உல்லாசமாக இருந்துள்ளதை, கணவர் ராமதாஸ் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால், ஆத்திரம் தாங்க முடியாத ராமதாஸ், அங்குக் கிடந்த கட்டையை எடுத்து அந்த இளைஞரைக் கடுமையாகத் தாக்கியதில், அவர் அலறி அடித்துக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனையடுத்து, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியை குத்தி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த நீலாவதி, பரிதாபமாக அங்கேயே விழுந்து உயிரிழந்தார்.

அடுத்த நாள் காலையில், நீலாவதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்க புகார் தெரிவித்துள்ளனர். அங்கு, விரைந்து வந்த போலீசார், நீலாவதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இரவு பணிக்குச் சென்றிருந்த மகனை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, “இது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது” என்று, கூறி சமாளித்துள்ளார். ஆனாலும், போலீசார் அவனை விடாமல் தொடர்ந்து விசாரித்து வந்துள்ளனர். 

“பாவப்பட்ட தன் மகனை போலீசார் விசாரிப்பதை அறிந்த தந்தை ராமதாஸ், தன் மகனை காப்பாற்றும் நோக்கில், “நான் தான் என் மனைவியை கொன்றேன்” என்று போலீசாரிடம் நேரில் சென்று சரணடைந்தார். இதனையடுத்து, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தது.

விசாரணையில், “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே, குடும்ப பிரச்சனை காரணமாக, என் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறேன். என் மனைவியிடம், அவருடைய தகாத உறவு முறை குறித்துப் பல முறை நான் நேரடியாக எச்சரித்தேன். 

குறிப்பாக, மகன் பெரியவனாகி விட்டான். இனி, அவனுக்காகவாவது நீ திருந்திய ஆக வேண்டும், என்று நான் பல முறை கூறியதால் தான், எங்களுக்குள் சண்டையே வந்தது.

நாங்கள் பிரிந்த பிறகும் கூட, அக்கம் பக்கத்தினர் எங்களிடம் வந்து சொன்ன போதும் கூட நான் ரொம்பவும் பொறுமையாக இருந்தேன். ஆனால், என் மனைவி அவளுடைய கள்ளக் காதலனுடன் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்ததை, என் மகனே நேரில் பார்த்துவிட்டுக் என்னிடம் அழுதுகொண்டே கூறிய போது, என்னால் என்ன செய்வது என்று புரியாமல், ஆத்திரத்தில் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டேன்” என்று, வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லீலாவதியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த வரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.