ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல் ! வைரல் ப்ரோமோ
By Aravind Selvam | Galatta | August 05, 2021 11:26 AM IST
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.
இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம்பருத்தி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி,பூவே பூச்சூடவா என்று 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் கோகுலத்தில் சீதை,நீதானே எந்தன் பொன்வசந்தம்,புது புது அர்த்தங்கள் என்று புதிய சீரியல்கள் என சூப்பர்ஹிட் சீரியல்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
இவர்களது சூப்பர்ஹிட் தொடரான யாரடி நீ மோஹினி தொடர் விரைவில் நிறைவடைகிறது இந்த தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது,அந்த ஷூட்டிங்கிற்கு பிறகு அதே செட்டில் தங்கள் புதிய சீரியலின் பூஜையை நடத்தியுள்ளனர்.யாரடி நீ மோஹினி தொடரை தயாரித்த monk ஸ்டுடியோஸ் இந்த தொடரையும் தயாரிக்கின்றனர்.
நினைத்தாலே இனிக்கும் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் ஆயுத எழுத்து தொடரில் நடித்து பிரபலமான ஆனந்த் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.