பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்ட நடிகை ! ரசிகர்கள் அதிர்ச்சி
By Aravind Selvam | Galatta | March 16, 2021 19:12 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா
இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.
இந்த தொடரில் சரவனவிக்ரமிற்கு ஜோடியாக சில நடிகைகள் வந்து சென்றனர்,கடைசியாக நடித்து வந்த வைஷாலி சமீபத்தில் கூட ஷூட்டிங்கில் இணைந்ததாக தெரிவித்திருந்தார்.இவருக்கு பதிலாக புதிய ஐஸ்வர்யாவாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் தீபிகா என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பல ரசிகர்களும் வைஷாலியிடம் ஏன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகி விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.இதற்கு பதிலளிக்கும் வகையில் லைவ்வாக வந்த வைஷாலி தான் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அதற்கான காரணத்தை இன்னும் சீரியலை சேர்ந்த யாரும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.சீரியலில் இருந்து நீக்கப்பட்டது தனக்கே அதிர்ச்சி தான் என்று தெரிவித்துள்ளார்.
WOW: Viswasam actor onboard for Rajinikanth's Annaatthe!
16/03/2021 06:45 PM
WOW: This popular actress gives birth to a baby boy - wishes pour in!!
16/03/2021 06:00 PM
Silambarasan TR's Manmadhan Re Release Trailer is now out - watch video here!
16/03/2021 05:00 PM