தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று கடந்த சில வருடங்களாக பலரும் தெரிவித்து வந்தனர்.விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி பல உதவிகளை ரசிகர்கள் மூலம் செய்து வருகிறார் விஜய்.இன்று அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி பதிவு செய்தார்.இதனை தொடர்ந்து விஜய் அரசியலில் களமிறங்கிறார் என்று பரபரப்பு கிளம்பியது.இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து மறுப்புகள் வந்த வண்ணம் இருந்தது.விஜய் சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டு , தனக்கும் தந்தையின் கட்சிக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் இன்று விஜயின் பனையூர் இல்லத்தில் மக்கள் இயக்கத்தின் முக்கிய மாவட்ட நிருவாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.