கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் அற்புதமாக நேரத்தை செலவு செய்து வருகிறார். 

soori

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 11-ம் நாளில் தனது அப்பா, அம்மா, மற்றும் உறவினர்களின் புகைப்படங்களை தனது மகனுக்கும், மகளுக்கும் காட்டி அவர்களது அருமை பெருமைகளை கூறுகிறார். மேலும் தனது திருமண நாளில் தனது தாயார் தான் தனக்கு தாலி எடுத்து கொடுத்ததாகவும், தாயை விட மிஞ்சிய அய்யரும் இல்லை, ஆண்டவனும் இல்லை என்றும் எல்லாமே நமக்கு பெற்றவர்கள் தான் என்றும் தனது மகளிடம் கூறியுள்ளார். 

Soori

நம்முடைய முன்னோர்களின் புகைப்படங்கள் இருந்தால் அவற்றை எடுத்து நமது குழந்தைகளுக்கு காண்பித்து நம்முடைய முன்னோர் குறித்து அடுத்த சந்ததியினர்களிடம் கூற வேண்டும் என்றும், அப்போதுதான் நமது உறவுகள் நீடிக்கும் என்று பயனுள்ள சிந்தனையை கூறியுள்ளார். ஆடல், பாடல், குளியல், சமையல் என தினமும் வீடியோ வெளியிடும் சூரி, சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.