விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.

இந்த தொடரில் சில நாட்களாக குமரன் தென்படாமல் இருந்தார்,இதனை பலரும் இவர் சீரியலில் இருந்து விலகியதாக தெரிவித்து வந்தனர்.ஆனால் குமரன் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் அதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் சில நாட்கள் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் தகவல் கிடைத்திருந்தது.தற்போது அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.