2 சிறுமிகள் பணத்திற்காக அடமானம் வைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகள்கள் சங்கீதா, கவிதா ஆகிய இருவரையும், அவர்களது பாட்டி வளர்த்து வந்துள்ளார்.

Thiruvarur girl child exploitation three people arrested Tamil Nadu

இந்நிலையில், தனது மகள்கள் சங்கீதா, கவிதா ஆகிய இருவரும் சில பெண்களிடம் அடமானம் வைக்கப்பட்டதாக அவரது தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமிகளைப் பணம் கொடுத்து அடமானமாக பெற்றுக்கொண்ட சகுந்தலா, கனகா உள்ளிட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமிகளை வளர்த்து வந்த பாட்டி விஜயலட்சுமி தான், சிறுமிகளை தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் கேட்டதாகவும், அதன்படியே தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, சிறுமிகளை அடமானம் பெற்றதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.

https://d1ydle56j7f53e.cloudfront.net/assets/general-images/1576242213image (1).jpg

இதனையடுத்து, சிறுமிகள் இருவரும் திருப்பூரில் வேலை செய்வதாகக் கூறப்பட்ட நிலையில், சிறுமிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிறுமிகளை விற்றதாகக் கூறப்படும் விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.