கள்ளக் காதலால் “என் கணவரோட ஆண் உறுப்பை சிதைச்சிடுங்க” என்று ஆசிரியையாக பணியாற்றும் மனைவியே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம், நெஞ்சை நடுநடுங்க செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அடுத்துள்ள கேசவ திருப்பபுரத்தில் கணேஷ் - காயத்ரி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு, 4 வயதில் மகள் இருக்கிறாள். கணவர் கணேஷ், அதே பகுதியில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார்.

மதுரையை பூர்விகமாகக் கொண்ட கணேஷ் மனைவி காயத்ரி, திருமணத்திற்கு முன் மதுரையைச் சேர்ந்த யாசின் என்ற இளைஞரை காதலித்து வந்து உள்ளார். 

அப்போது, அவர்கள் இருவரும் காதல் ஜோடியாக மதுரை சுற்றி வலம் வந்த போது, இந்த காதல் கதை காயத்ரியின் பெற்றோருக்குத் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த காயத்ரியின் பெற்றோர், மகளின் காதலை பிரித்து கணேஷிற்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். 

ஆனாலும், காயத்ரியின் திருமணத்திற்குப் பிறகும் யாசினி உடன் அவரது காதல் கள்ளக் காதலாக மாறி தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால், கணவர் கணேஷ் வெளியூர் செல்லும் போதெல்லாம் கள்ளக் காதலன் யாசின் உடன் காயத்திரி உல்லாசமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.

இப்படி, காயத்ரிக்கு கள்ளக் காதல் மிகவும் பிடித்துப் போக, யாசின் மீது பிரிய முடியாத பாசம் வைத்திருந்தார். அதேபோல், கள்ளக் காதலன் யாசினும், காயத்ரியை விட்டுப் பிரிய முடியாத ஏக்கத்தில், நாகர்கோவிலுக்கு வந்து அங்குள்ள கேசவ திருப்பபுரத்தில் ப்ளே ஸ்கூல் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டார். 

ஆனால், அந்த ப்ளே ஸ்கூல் தொடங்க தன்னிடம் போதிய பணம் இல்லாததால், காதலருக்கு உதவி செய்ய விரும்பிய காயத்ரி, கணவர் பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை எடுத்து, “எனது சொந்த அண்ணனுக்கு அவசர தேவைக்காக உதவுவதாக” பொய் சொல்லி, கணவனை ஏமாற்றி விட்டு காதலன் யாசினுக்கு அந்த பத்திரத்தை அடமானம் வைத்து பணம் கொடுத்து உள்ளார்.

இப்படி அடமானம் வைத்தபோது, அதன் மூலம் 10 லட்சம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தைக்கொண்டு, ப்ளே ஸ்கூல் தொடங்கிய அவர்கள், அந்த ப்ளே ஸ்கூலில் ஆசிரியையாகவும் காயத்திரியை, கள்ளக் காதலன் யாசின் அமர்த்தி அழகுபார்த்து உள்ளான். 

அத்துடன், கள்ளக் காதலர்கள் இருவரும், ப்ளே ஸ்கூலை சரிவரக் கவனிக்காமல் விட்டுவிட்டு, தங்களது உல்லாச வாழ்க்கையிலேயே அவர்கள் குறியாக இருந்ததால், ப்ளே ஸ்கூலில் லாபம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டுப் பத்திரத்தை மீட்க முடியாமல், மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணவர் கணேஷ், வீட்டுப் பாத்திரம் குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, ஏதேதோ சொல்லி காயத்ரி சமாளித்து உள்ளார். 

மேலும், வீட்டுப் பத்திரம் குறித்து கணவருக்கு சந்தேகம் வந்துவிட்டது என்றும், ஆனால் இது குறித்து தன் கணவருக்கு எதுவும் தெரியக்கூடாது என்று நினைத்த மனைவி காயத்ரி, தனது கள்ளக் காதலன் யாசினும் உடன் சேர்ந்து கணவனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். 

திட்டமிட்டபடி, கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமாரை என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி, கணவர் கணேஷை கொலை செய்யக் கூறி உள்ளார்.

குறிப்பாக, “என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார் என்று நான் நிரூபிக்க வேண்டும் என்றால், என் கணவரின் ஆண் உறுப்பைச் சிதைக்க வேண்டும்” என்றும், காயத்திரி கூறி அந்த கூலிப்படையை ஏவி விட்டிருக்கிறார்.

அதன்படி, இரவு நேரத்தில் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் வந்து கொலை செய்தவர்க்கு வசதியாக வீட்டின் பின்புற கதவு முதல் அனைத்து கதவுகளையும், அன்று பூட்டாமல் வெறுமனே சாத்தி வைத்து உள்ளார். 

அதன்படி, இரவு வீடு புகுந்த அந்த கூலிப்படையைச் சேர்ந்தவர்கள், கணேஷின் ஆண் உறுப்பை சிதைத்து, கொடூரமாக அவரை கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த கொலையாளிகள் வீட்டிற்குள் எப்படி வந்தனர் என்று விசாரணையில், மனைவி காயத்ரி மேல் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் விசாரித்தபோது, அவரே எல்லா உண்மைகளையும் ஒப்புக்கொண்டார். மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், தலைமறைவாகியுள்ள கள்ளக் காதலன் யாசினை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும் பீதியும் ஏற்ப்பட்டுள்ளது.