30 வயது பெண்ணுடனும், அவளது தங்கை உடனும் கள்ளக் காதலில் இருந்த வந்த காமுகன் ஒருவன், அவர்களது 9 வயது மகளுக்குக் கடந்த 2 ஆண்டுகளாக அந்த தாயின் அனுமதியோடு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை கீழ்பாக்கம் அடுத்து உள்ள டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெருமாள் என்பவர், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடன் கள்ளக் காதல் உறவில் இருந்து வந்திருக்கிறார். இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இப்படியாக, இவர்களது கள்ளக் காதல் கடந்த 2 ஆண்டுகளாகச் சென்று உள்ளது.

இந்த நிலையில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அந்த 30 வயது பெண்ணின் கள்ளக் காதல் விசயம், அவரது தங்கையான 28 வயது பெண்ணுக்குத் தெரிய வந்தது. இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த பெண், காலப்போக்கில் அக்காவின் கள்ளக் காதலன் உடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால், ஒரே நேரத்தில் அக்கா - தங்கை என்று, இருவருடனும் பெருமாள் கள்ளக் காதல் உறவில் இன்புற்று இருந்து வந்திருக்கிறார். 

இப்படியாக இவர்களது கள்ளக் காதல் வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது.

இந்த நிலையில் தான், கள்ளக் காதல் உறவில் இருந்த 30 வயது பெண்ணின் 9 வயது மகள் மீது, அந்த பெருமாள் சபலப்பட்டு இருக்கிறார். இதனால், அந்த 9 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட பெருமாள், அந்த சிறுமியுடைய தாயின் அனுமதியுடன், கடந்த 2 ஆண்டுகளாக அந்த சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

ஆனாலும், அந்த பெருமாளுக்கு பாலியல் வெறி அடங்காத நிலையில், இந்த 9 வயது சிறுமியின் வீட்டுக்கு வரும் அவர்களது தோழிகளான 11 வயது மற்றும் 4 வயது சிறுமிகளுக்கும், சிறுமியின் தாய் மற்றும் சித்தியின் அனுமதியுடன் அவர்களது கண் முன்னாடியே அந்த கள்ளக் காதலன் பெருமாள், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

குறிப்பாக, சிறுமியின் தாய் மற்றும் சித்தியின் உதவியுடன் அந்த வீட்டின் அருகில் வசிக்கும் 15 வயது மற்றும் 17 வயது சிறுமிகளுக்கும் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பெருமாளின் பாலியல் தொல்லைகள் எல்லாம் எல்லை மீறிப் போகவே, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் தங்களது பெற்றோர்களிடம் கூற, அங்கு பெரும் பிரச்சனை வெடித்து உள்ளது. 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளும், அவர்களது பெற்றோர்கள் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பெருமாள் மற்றும் சிறுமியின் தாய், சித்தி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.