விவாகரத்து கேட்டு வந்த பெண்ணுடன் வழக்கறிஞர் ஒருவர் குடும்பம் நடத்தி வந்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகள் 30 வயதான சத்யா என்ற பெண்ணுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சியாகச் சென்ற சத்தியாவின் வாழ்க்கையில், அதன் பிறகு அவரது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது.

சமீபத்தில், கணவன் - மனைவிக்கு இடையேயான சண்டை, இன்னும் பெரிதான நிலையில், கணவனைப் பிரிய முடிவு செய்த மனைவி சத்தியா, “என்  கணவனிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்” என்று கேட்டு, வெங்கடேசன் என்ற வழக்கறிஞரை சந்தித்துப் பேசி உள்ளார்.

37 வயதான வழக்கறிஞர் வெங்கடேசன், திருவள்ளூரை அடுத்து உள்ள வெள்ளரி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜி என்பவருடைய மகன் ஆவர். 

அதாவது 30 வயதான சத்தியா, தனது கணவனுடன் சண்டைபோட்டுக்கொண்டு, விவாகரத்து கேட்டு வழக்கறிஞரான வெங்கடேசனை அடிக்கடி நேரில் வந்து பார்த்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இப்படி, வழக்கறிஞர் வெங்கடேசனை, சத்தியா அடிக்கடி வந்து சந்தித்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக் காதலாக மாறி உள்ளது. 

இதனால், அவர்கள் அதிகம் தனிமையில் சந்தித்துக்கொண்ட நிலையில், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விவகாரத்து கேட்டு வந்த சத்யாவை, திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேய புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வழக்கறிஞர் வெங்கடேசன் தனியாகத் தங்க வைத்து உள்ளார். 

இதனால், சத்தியாவின் கணவன், சத்தியாவின் பெற்றோரிடம் சென்று முறையிட்டதாகத் தெரிகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சத்தியாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், சத்தியாவை தேடி அலைந்து உள்ளனர்.

இதனையடுத்து, சத்தியா இருக்கும் இடத்தை தெரிந்துகொண்ட அவரது பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.

அப்போது, வீட்டில் அந்த கள்ளக் காதலனான வழக்கறிஞர் வெங்கடேசனையும் சத்தியாவையும் ஒரே வீட்டில் ஒன்றாகப் பார்த்த அவரது பெற்றோர்கள், இருவரையும் தங்கள் மறைத்துக் கொண்டுவந்திருந்த பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த வழக்கறிஞர் வெங்கடேசன், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆனால், சத்யா தலையில் வெட்டுக்காயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனால், அவர் இறந்து விட்டதாக அவரது பெற்றோர் அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

பின்னர், காக்களூர் ஆஞ்சநேய புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அலறல் சத்தம் கேட்டதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து வரைந்து வந்த போலீசார். உயிரிழந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அருகிலேயே மயங்கிக் கடந்த சத்தியாவையும் மீட்டு, அருகில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், “மயக்க நிலையில் மீட்கப்பட்ட சத்தியா என்ற பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு வழக்கறிஞரான வெங்கடேசனை தேடி அடிக்கடி வந்ததாகவும், அப்போது 

ஏற்பட்ட பழக்கத்தினால், சத்யாவை தனியாக அழைத்து வந்து வழக்கறிஞர் வெங்கடேசன் காக்களூரில் தற்போது கொலை செய்யப்பட்ட  வீட்டில் கடந்த 2 நாட்களாகத் தங்கி தனியாக குடும்பம் நடத்தி வந்ததும், இதனால் சத்தியாவின் பெற்றோரே அவரை மகளைக் கொள்ள வந்து, கள்ளக் காதலனைக் கொன்றுவிட்டுச் சென்றதும்” தெரிய வந்தது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.