10 ஆம் வகுப்பு மாணவனின் காம வெறிக்கு இறையான 10 வயது மாணவி!
By Arul Valan Arasu | Galatta | 05:43 PM
10 வகுப்பு மாணவனின் காம வெறிக்கு 10 வயது மாணவி இறையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலப்பிரதேசம் குளு மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது மாணவி, தினந்தோறும் அருகில் உள்ள பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.
இதை நோட்டமிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன், சிறுமியைப் பாலோ பண்ணி பின்னாடியே சென்று, சிறுமியிடம் ஆசையாகவும், அன்பாகவும் பேசி வசியப்படுத்தி உள்ளான்.
இதனையடுத்து, அந்த சிறுமியுடன் பேசியபடியே நடந்து சென்ற அவன், திடீரென்று சிறுமியை அங்கிருந்து அருகில் உள்ள புதர் மண்டிகிடக்கும் பகுதிக்கு இழுத்துச் சென்று, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
பின்னர், அங்கிருந்த மீண்டு வந்த சிறுமி, வீடு திரும்பிய நிலையில், தன் பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனைக் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, அங்குள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அப்பகுதியில் உள்ள உனா என்ற சிறார் காப்பகத்தில் சிறுவனை ஒப்படைத்தனர்.
இதனிடையே, பத்தாம் வகுப்பு மாணவனுக்கு ஏற்பட்ட காம வெறியால், 10 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.