சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர், 15 வயது சிறுமியை ரயிலுக்குள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் ஒருவர், வீட்டில் பெற்றோருடன் சண்டைப் போட்டுக்கோண்டு, கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர், வெளி மாநிலத்திற்குச் சென்றுவிடலாம் என் எண்ணத்துடன், அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

Chennai 15 year old girl rape youth arrest

அங்கு, ஜம்மு காஷ்மீரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த 30 வயது மோகன்லால், பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால், ஜம்மு காஷ்மீருக்கே திரும்பி விடலாம் என்று, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகமாகி உள்ளனர். அந்த சிறுமியும், தான் வீட்டை விட்டு சண்டைப் போட்டுக்கொண்டு, வெளியேறி உள்ளதாகக் கூறியுள்ளார். 

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அவன், “நான் ஜம்மு காஷ்மீர் செல்கிறேன். அங்கு, உன்னை அழைத்துக்கொண்டு போகிறேன். அங்கே உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு, அங்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன்” என்று பல ஆசைவார்த்தைகள் கூறி, சிறுமியை வசியப்படுத்தி உள்ளார்.

Chennai 15 year old girl rape youth arrest

பின்னர், இருவரும் ரயிலுக்குள் ஏறி உள்ளனர். உள்ளே சென்றதும், சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவன், திடீரென்று சிறுமி மீது பாய்ந்து பலாத்காரம் செய்துள்ளார். அவனுடன் போராடிய சிறுமி, கத்தி கூச்சலிட்டுள்ளார். 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த ரயில்வே போலீசார், சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்ததைச் சொல்லி சிறுமி அழுதுள்ளார். இதனையடுத்து, அந்த வடமாநில காமக்கொடூரனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
 
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, அவர்களிடம் சிறுமியை போலீசார் ஒப்படைத்தனர். இதனிடையே, வடமாநில காமக்கொடூரன், சென்னையில், ரயிலில் வைத்து 15 சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.