ஆம்பூர் அருகே மனைவியின் பஸ்ட் அட்டெம்ப்டில் உயிர் தப்பிய கணவன், 2 வது அட்டெம்ப்ட் பிளானில் வெறித்தனமாக கணவனை, மனைவியும் - மாமியாரும் சேர்ந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாபுக்கு, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஜெயந்தி என்ற பெண்ணுடன் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து, ரமேஷ் பாபு - ஜெயந்தி தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்தனர். தற்போது, அவர்களது மகளுக்கு 10 வயது ஆகும் நிலையில், அவர்களது மகனுக்கு வயதாகிறது.

மேலும், ரமேஷ் பாபு அதே பகுதியில் எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வந்தார். அத்துடன், மதுவுக்கு அடிமையான எலக்ட்ரிசியன் ரமேஷ் பாபு, தினந்தோறும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி ஜெயந்தியை அடித்து கொடுமைப் படுத்துவதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி ஜெயந்தி, கணவரின் டார்ச்சர் குறித்து தனது தாயார் சரசாவிடம் கூறி அழுது உள்ளார். 

இதனால், மாமியார் சாரா, தன் மகளுக்கு, “உன் கணவனை கொன்று விடலாம்” என்று ஆலோசனை வழங்கி உள்ளார். இதனை முதலில் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, பின்னர் சரி என்று சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மனைவி ஜெயந்தி, மாமியார் சரசா ஆகியோர் இணைந்து தங்களது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினர் 4 பேரின் உதவியோடு ரமேஷ் பாபுவை கொலை செய்யத் திட்டமிட்டனர். 

திட்டமிட்ட படி, போன மாதம் அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் பாபு மீது, காரை மோத வைத்து விபத்து ஏற்படுத்தி உள்ளனர். ஆனால், ரமேஷ் பாபு லேசான காயங்களுடன் அப்போது உயிர் தப்பி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 27 ஆம் தேதி ஆலாங்குப்பம் பாலாறு அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த ரமேஷ் பாபுவை, பின் தொடர்ந்து சென்ற கௌதமன், ராமன், தனுஷ், விக்கி ஆகிய 4 பேரும், அவரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி அடித்தே கொலை செய்து உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடலை அந்த பகுதியில் உள்ள ஏரி கால்வாய் பகுதியில் அவருடைய இருசக்கர வாகனத்துடன் போட்டு விட்டு சென்றுள்ளார். 

பின்னர், கடந்த 27 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மகன் ரமேஷ் பாபு, வீடு திரும்பவே இல்லை என்று அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து விட்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகத் தெரிகிறது. 

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி மாலை நேரத்தில் ஒருவரின் சடலம், பலத்த காயங்களுடன் அங்குள்ள ஏரி கால்வாய் பகுதியில் கிடப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், அங்குள்ள ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் கூறியுள்ளனர்.

இது குறித்து விரைந்து சென்ற ஆம்பூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ரமேஷ் பாபுவின் மனைவி ஜெயந்தி, மற்றும் அவரது தாயார் சரசா அவரது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினர் என அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. 

இதனையடுத்து, மனைவி ஜெயந்தி மற்றும் மாமியார் சரசா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த விக்கி, தனுஷ், ராமன், கௌதமன் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்தி விட்டு, அவர்களை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.