தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. ஆகையால் அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 9-ம் தேதி கூடுகிறது. இந்நிலையில் மறைந்த க. அன்பழகன் வகித்து வந்த திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் இன்று காலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்த துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் அவர் வழங்கினார். ஏற்கனவே திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால், காலியான பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், மறைந்த க. அன்பழகன் வகித்து வந்த திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையில் பொதுச்செயலாளா், பொருளாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக திமுகவின் பொதுக்குழு செப்டம்பா் 9-ஆம் தேதி கூட உள்ளது. முன்னதாக திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். 

முன்னராக பொருளாளா் பதவிக்குத்தான் போட்டி இருந்து வந்தது. டி.ஆா்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோா் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது. திமுகவைப் பொருத்தவரை தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா் பதவிகளுக்குப் போட்டியின்றி தோ்ந்தெடுப்பதுதான் வழக்கம். அந்த அடிப்படையில் பொருளாளா் பதவிக்கு உரியோரைப் போட்டியின்றி தோ்ந்தெடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டாா்.

அதன் அடிப்படையில் பொருளாளா் பதவிக்கு ஆ.ராசா போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். எ.வ.வேலுவும் போட்டியிடப் போவதில்லை முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார்.

இதையொட்டித்தான் தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.

இதற்கிடையே, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாலை 4 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், தி.மு.க. பொது செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.