பெங்களூருவில் மனைவி மீது சந்தேகப்பட்டு, வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்த்த கணவனை, மனைவி கண்டுபிடித்ததால், அவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரின் மகாதேவபூர் பகுதியில் வசிக்கும் 45 வயதான பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், தன் 38 வயது மனைவி மீது கடந்த 17 ஆண்டுகளாகச் சந்தேகத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். 

இந்த தம்பதியினர் கடந்த 2002 ஆம் ஆண்டு நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், அதன் பிறகு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு, ஒரே ஒரு வருடம் மட்டுமே சந்தோஷமாகச் சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில், சந்தேக தீ பற்றி எரியத் தொடங்கி உள்ளது. அதன் பிறகு, இந்த தம்பதியினருக்குத் திருமண வழக்கைக் கசக்க தொடங்கியது.

பெங்களூரில் உள்ள பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் அந்த கணவர், தனது மனைவி மீது அடிக்கடி சந்தேகம் அடையத் தொடங்கினார். சந்தேகம் காரணமாக, மனைவியைப் பல முறை கொடுமைப் படுத்தி அடித்து கடுமையாகத் தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, அந்த கணவர் தினமும் அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, அலுவலகத்திற்குச் செல்லாமல், மனைவிக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள அலமாரியில் ஒளிந்து மனைவியை வேவு பார்த்து வந்துள்ளார்.

சம்வத்தன்றும், கணவர் அலுவலகத்திற்குச் செல்லாமல், மனைவிக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள அலமாரியில் ஒளிந்து மனைவியை வேவு பார்த்து வந்துள்ளார். இதனை மனைவி கண்டு பிடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவன், மனைவி கடுமையாகத் தாக்கி உள்ளார்.

இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மனைவி கண்ணீர் மல்கப் புகார் கூறினார். அந்த புகாரில், “கடந்த 17 ஆண்டுகளாகத் தனது கணவர் தன்னை உளவு பார்க்க அடிக்கடி அலுவலகத்திற்குச் செல்லாமல், தவிர்த்து வருவதாக” கூறியுள்ளார்.

மேலும் “தனது கணவர் ஒரு மன நோயாளி எனவும் குறிப்பிட்ட அவர், இதற்கு முன்பு சித்தப்பிரமைக்கு என் கணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், அப்போது அவர் தனது குடும்பத்தினரிடம் அன்பானவராக இருந்தார்” என்றும் தெரிவித்தார். 

“ஆனால், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தன் கணவர் திடீரென்று சிகிச்சையை நிறுத்தினார் என்றும், அதன் பிறகு இவ்வாறான செயல்களில் அவர் அடிக்கடி ஈடுபட்டு வருவதாகவும்” பாதிக்கப்பட்ட மனைவி கவலைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “தன் மனைவியைப் பல ஆண்களுடன் உறவு வைத்திருப்பதாக அவருக்கு சந்தேக எண்ணம் தோன்றுகிறது என்றும், அதன் காரணமாக தன் கணவர் இவ்வாறு நடந்துகொள்கிறார்” என்றும் அவரின் மனைவி குறிப்பிட்டார்.

மேலும், “வீட்டிற்குத் தினமும் செய்தித்தாள் விநியோகம் செய்வோர், பால் போடுபவர் தொடங்கி அனைவரிடமும் தன் கணவர் சண்டை போடுவதாகவும்” பாதிக்கப்பட்ட மனைவி கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.

“சந்தேகப்பட்டு, பல முறை என்னை அவர் மிகக் கொடூரமாகத் தாக்கியதாகவும்” அவர் குற்றம் சாட்டினார்.

“கணவரின் தன்னுடைய இந்த நிலையை மறைக்கும் விதமாக, தனது தேவாலயம் குழு உறுப்பினர்களிடம், என் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதனால் அவரிடமிருந்து வரும் எந்த போன் அழைப்பையும் பெரிது படுத்த வேண்டும்” என்று, தன் சார்ந்தவர்கள் தன் கணவர் கூறி வைத்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மனைவி கவலையுடன் தெரிவித்துள்ளார்.

“தற்போது தன் கணவரின் மன நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும், அதனாலேயே என்னைக் கொலை செய்ய அவர் சதி செய்ததாகவும்” பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் அளித்தார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.