தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞன் இசைஞானி இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து பல தாசப்தங்களாக அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார். சமீபத்திலும் இவர் இசையில் பல படங்கள் கவனிக்கப்பட்டு வருகிரது. அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்படி தொடர்ந்து ‘கஸ்டடி’, ‘ராமானுஜம்’, ‘தமிழரசன்’, ‘அம்மாயி’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்களுக்கு இளையராஜா அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. அதன்படி இளையராஜா சமீபத்தில் இளம் இயக்குனர்களுடன் வேலை பார்ப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளார். அதன்படி நிறைய முன்னணி இயக்குனர்கள் இளையராஜா வின் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய அளவு பிரபலமடைந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அதன்பின் அவருக்கு திரைப்பட வாய்ப்பு கைகொடுக்காமல் போனது. சமீபத்தில் அவர் இயக்கத்தில் மலையாள திரைப்படமான ‘கோல்ட்’ திரைப்படம் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப் பட்டாலும் அவரது பிரேமம் பட புகழை எட்ட முடியாமல் போனது.

அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் ஒவ்வொரு படமும் தமிழிலும் மலையாளத்திலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் அதன்மூலம் அவரது முந்தைய திரைப்படம் மலையாளத்தில் அமைந்துள்ளதால் அவரது அடுத்த திரைப்படம் தமிழில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதன்படியே அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் தமிழில் படம் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் அவர் இயக்கவிருக்கும் புதிய தமிழ் படத்திற்கு பின்பு நிச்சயம் இளையராஜா அவர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன். இது குறித்து அவரது சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.