தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. கடந்த 2010 ம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதே ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் அறிமுகம் கொடுத்தார். இரண்டு துறையிலும் தொடக்கத்தில் இருந்தே கவனம் பெற்ற சமந்தா கடந்த 2012 ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான ‘நான் ஈ’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அதை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக தமிழில் வலம் வந்தார். ஒரு சேர தெலுங்கு மொழியிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமல்லாமல் கதாநாயகிகளை மையப்படுத்தி இருக்கும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சமந்தா நடித்து வருகிறார்.

இதுமடுமல்லாமல் கடந்த 2021 ல் வெளியான பிரபல இந்தி இணைய தொடரான பேமிலி மென் தொடரின் இரண்டாவது சீசனில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருப்பார். அட்டகாசமான நடிப்பை வெளிபடுத்தி தற்போது இந்தியிலும்பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் விஜய் தேவரகொண்டா உடன் ‘குஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அதிரடி ஆக்ஷன் இணைய தொடரானா சிட்டாடேல் தொடரில் வருண் தவானுடன் நடித்து வருகிறார்.

சமந்தா திரைத்துறையில் மும்முரமாக இயங்கி வருவது போல் சமூக பணியிலும் ஆரம்பத்தில் இருந்தே இயங்கி வருகிறார். அதன்படி தனது பிரத்யூஷா அறக்கட்டளையின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல நலதொண்டு உதவிகளை கடந்த 2012 ம் ஆண்டு முதலே அவர் செய்து வருகிறார். மிகப்பெரிய வேலைகளை சமந்தா சத்தமில்லாமல் செய்து வருகிறார். இது அவ்வப்போது பல தளங்களில் வெளியாவதும் உண்டு.

இந்நிலையில் ஆந்திரா குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் சந்தீப் என்னும் சமந்தாவின் ரசிகர் சமந்தா அவருக்கு கோயில் கட்டி வருகிறார். இதன் திறப்பு விழா நாளை(ஏப்ரல் 28) சமந்தாவின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ளது.

கோயிலுக்காக சமந்தாவின் உருவ சிலையை உருவாக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமந்தாவின் ரசிகர் சந்தீப் தெரிவித்ததாக பரவும் தகவல், சமந்தாவின் சமூஹ்க சேவைகளை புரிந்து கொண்டு சமந்தாவின் மீது மதிப்பு கூடியதாகவும் இதனால் அவருக்கு கோவில் கட்ட தீர்மானித்ததாகவும் இதற்காக அவரது வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோவில் கட்டி வருவதாகவும் சொல்லப் படுகிறது. இந்த செய்தி ரசிகர்களை நெகிழ செய்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகைகளுக்கு கோவில் கட்டும் வழக்கம் தென்னிந்தியாவில் வழக்கமாக இருந்து வருகிறது. குஷ்பூ தொடங்கி சமீபத்தில் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த நிதி அகர்வால் வரை ரசிகர்கள் தங்கள் ஈடுபாட்டினை கோவில் வடிவில் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.