பெண்ணை கொன்று பிணத்துடன் செக்ஸ் வைத்துக்கொண்ட போதை ஆசாமியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், திகிலையும் கிளப்பி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அசாம்கரில் அடுத்துள்ள முபாரக்பூர் பகுதியில் தான் இந்த திகில் கிளப்பும் சம்பவம் நடந்துள்ளது.

கடந்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி முபாரக்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த போதை ஆசாமி நசிருதீன், வீட்டிலிருந்த கணவன் மனைவி மற்றும் அவர்களுடைய 4 மாத குழந்தையைக் கொன்றுள்ளார். இதனால், அந்த வீடே ரத்த வெள்ளத்தில் மிதந்தது.

இதனையடுத்து, கொலை செய்த பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து, அந்த பிணத்துடன் காம இச்சைகளைப் பகிர்ந்துகொண்ட நசிருதீன், அது வெறும் சடலம் என்று கூட பாராமல் காமக்கொடூரத்தின் உச்சமாக, பிணத்துடன் உடலுறவு கொண்டுள்ளான்.

குறிப்பாக, பெண்ணை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட அந்த காமக்கொடூரன், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு உயிர் பயத்தில் நடுங்கி அழுது துடித்துக்கொண்டிருந்த அவர்களது 10 வயது மகளையும், அதே இடத்தில் தாய் - தந்தையர்கள் இறந்த ரத்தத்தின் மீது படுக்க வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியை கசக்கிப் பிழிந்துள்ளான். இதனையடுத்து, அவன் தலைமறைவாகி உள்ளான்.

காலையில் விடிந்ததும், பக்கம் பக்கத்தினர் வீட்டில் நடந்த அவலங்களைப் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், பிணத்துடன், அந்த காம வெறியன் செக்ஸ் வைத்துக்கொண்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவனிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
டெல்லி, அரியானா, மேற்குவங்கத்திலும் இதேபோல் கொலை செய்து, பிணத்துடன் உடலுறவு கொண்டுள்ளதும் தெரியவந்தது.

இதனால், விசாரணை நடத்திய போலீசாரே கடும் அதிர்ச்சியில் உரைந்துபோய் உள்ளனர். இதனையடுத்து, நசிருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அத்துடன், கைது செய்த குற்றவாளியைத் தூக்கில் போட வேண்டும் என்றும், அவனைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனிடையே, பெண்ணை படுகொலை செய்துவிட்டு, குடிபோதையில் காம வெறியன் ஒருவன், பிணத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.