ரூம்போட்டு நர்சுடன் ஆசைதீர உல்லாசம்! பூக்கடை ஓனரின் ஆசை வார்த்தையால் நேர்ந்த விபரீதம்..

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ரூம்போட்டு நர்சுடன் உல்லாசம் அனுபவித்த பூக்கடை ஓனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரைச் சேர்ந்த 20 வயதான ஆனந்தி, நர்சிங் படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வந்துள்ளார்.

அதேபோல், அங்குள்ள மஞ்சினி நகரைச் சேர்ந்த இவரது உறவினரான கோபி, அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால், கோபி அடிக்கடி ஆனந்தியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இதில், இருவருக்கும் நட்பாகப் பழக்கம் ஏற்பட்டு, பின் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். அத்துடன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து ஆசை தீர உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும், வெளியே ரூம் போட்டும், ஆசைதீர உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆனந்தி 3 மாத கர்ப்பமானார். இது குறித்து கோபியிடம் கூறவே, அவர் திருமணம் செய்துகொள்வதாகத் தாமதப்படுத்தி உள்ளார்.

ஆனால், கர்ப்பமடைந்தது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய ஆனந்தி, நேராக கோபி வீட்டிற்குச் சென்று, தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளும் படி, கோபியிடமும், அவரது பெற்றோரிடமும் வற்புறுத்தி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த கோபியின் பெற்றோர், ஆனந்தியை மிரட்டி விரட்டியடித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தி, அங்குள்ள காவல் நிலையத்தில், புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கோபியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.