திருமண செய்துகொள்வதாகக் கல்லூரி பேராசிரியருடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குட்டிபுரத்தைச் சேர்ந்த ஹபீஸ் மனூரில், அதே பகுதியில் பணியாற்றும் தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துள்ளனர்.

இந்நிலையில், இருவரும் தனிமையில் சந்திக்கும்போது, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிய ஹபீஸ் மனூரில், அந்த கல்லூரி பேராசிரியையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அவரின் அந்தரங்கத்தை, அவன் தனது செல்போனில் படமும் எடுத்து வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ள அந்த பெண் வற்புறுத்தத் தொடங்கியதை அடுத்து, அந்த பெண்ணிடமிருந்து அவன் விலகத் தொடங்கி உள்ளான். ஆனால், அவனை விடாமல், அந்த பெண் திருமணம் செய்துகொள்ளத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, “உனது அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோ தன்னிடம் இருக்கிறது. மறுபடியும் என்னைத் தொந்தரவு செய்தால், எல்லாவற்றையும் நான் இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்துபோன அந்த பெண், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், ஆத்திரமடைந்த அவன், அந்த பெண்ணின் புகைப்படங்களைச் சொன்னது போலவே, இணையத்தில் வெளியிட்டுவிட்டு, வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், காவல் நிலையம் வந்து மீண்டும் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ளார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.