சிறுமியை தூக்கிச் சென்று சில்மிஷம் செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்த 35 வயதான தியாகராஜன், கடந்த ஆண்டு மார்ச் மாதம், அப்பகுதியில் உள்ள நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்தா 5 வயது சிறுமியை மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளார்.

Chennai 5 years old girl Molested

அங்கு, சிறுமியை பாலியல் ரீதியாகச் சில்மிஷம் செய்து துன்புறுத்தியுள்ளார். இதனால், தூக்கத்திலிருந்து கண் விழித்த சிறுமி, வலியில் அழுது கத்தி உள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோர், ஓடிவந்து சிறுமியை மீட்டு, அவனைப் பிடித்து துறைமுகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Chennai 5 years old girl Molested

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தியாகராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த ஒரு வருடங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தியாகராஜன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 5 வயது சிறுமியை தூக்கிச் சென்று சில்மிஷம் செய்த குற்றத்திற்காக, தியாகராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, தியாகராஜன் சிறையில் அடைக்கப்பட்டார்.