பெற்ற பிள்ளைகளுக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண்ணின் அம்மாவுடன், மாப்பிள்ளையின் அப்பா ஓடிப்போன சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் தான், இந்த கொடுமை. “என்ன கொடுமை சார்..?!” என்ற சினிமா வசனத்திற்கு ஏற்பதன், இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில், ஒரு இளைஞருக்கும் - இளம் பெண் ஒருவருக்கும் இடையே, கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பின்னர், மணமக்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், இருவரும் தங்களது திருமண எதிர்பார்ப்புகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்த வண்ணம் இருந்தனர்.

இதனிடையே, இருவீட்டார் பெற்றோர்களும், திருமண வேலைகள் தொடர்பாக அவ்வப்போது, நேரில் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.

மாப்பிள்ளையின் அப்பா சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதேபோல், மணப்பெண்ணின் அம்மா ஸ்வாதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துப் பேசி வந்தனர்.

இருவரையும் பார்க்கும் உறவினர்கள், “பிள்ளைகளின் திருமண விசயமாகத் தான் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்கள்” என்று நினைத்துக்கொண்டார்கள்.

ஆனால், இவர்கள் இருவரும் பள்ளிக் கால நண்பர்களாம். இவர்கள் பள்ளியில் படிக்கும்போதே, ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல், இருவரும் தனித் தனியாகப் பிரிந்த நிலையில், தற்போது தங்களது பிள்ளைகளின் திருமணத்தால், இருவருடைய உறவையும் அவர்களாகவே, மீண்டும் புதுப்பித்துக்கொண்டு, நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

இதனிடையே, திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் கால மட்டும் இருக்கும் நிலையில், மணப்பெண்ணின் அம்மாவுடன், மாப்பிள்ளையின் அப்பா வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதனால், அவர்களது பிள்ளைகளின் திருமணம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஓடிப்போன இருவருக்கும், இணையத்தில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. தற்போது, இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.