தயங்கித் தயங்கி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

ஈரோடு மாவட்டம் மேட்டூர் சாலையில் குணசேகரன் என்பவர், ஈஸ்வரன் என்ற பெயரில் தங்கும் விடுதி நடத்தி வந்தார். தனது சகோதரர்களான ஈஸ்வரன், பழனிசாமி உடன் இணைந்து இந்த தங்கும் விடுதியை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை தனது தங்கும் விடுதியின் 3வது மாடியிலிருந்து, கீழு குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த விடுதியின் 3வது மாடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், குணசேகரன் தற்கொலை செய்வதற்கு முன் பல கோணங்களில் யோசித்து முடிவெடுத்துள்ளது தெரியவந்தது. குறிப்பாக, அவர் தற்கொலை முடிவு எடுத்த உடன், அந்த மாடிக்கு வருவதும், பின்னர் பின்வாங்குவதும், மீண்டும் மாடியிலிருந்து குதிக்க வருவதும், மீண்டும் அந்த முயற்சியைக் கைவிடுவதுமாக இருந்துள்ளார்.

இப்படி, நீண்ட நேரமாகத் தயங்கித் தயங்கி தற்கொலை முடிவைப் பின்வாங்கிய அவர், ஒருகட்டத்தில் தீர்மானமாக முடிவெடுத்து, வந்த வேகத்தில் மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த காட்சிகள் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, குணசேகரன் தற்கொலை செய்துகொண்டதற்கு குடும்பத்தகராறு காரணமா? அல்லது கடன் பிரச்சனை காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.