ரயில் நிலையத்தில் இளம் பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் ரயில் நிலையம் அருகே, 20 வயது இளம் பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற துர்கா பூஜையில் கலந்துகொண்டுவிட்டு, வீடு திரும்புவதற்காக அங்குள்ள ரயில் நிலையத்தில் தனியாகக் காத்திருந்தார்.

girl sexual assault

அப்போது, அந்த பகுதியில் சிலர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் நீண்ட நேரமாக காத்திருப்பதை நோட்டமிட்ட அவர்கள், அந்த பெண்ணை அங்கிருந்து அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குத் தூக்கிச் சென்று, அந்த பெண்ணை 4 பேர் சேர்ந்து, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்ட அந்த பெண், தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார்.

4 பேரும் ஆசை தீர பாலியல் வன்புணர்வு செய்த பிறகு, அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், பணியிலிருந்தவர்களின் பெயர்களையும் ஆய்வு செய்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

மேலும், கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரும், தனியாரால் துப்புரவுப் பணிக்கு வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகத் தனியார் துப்புரவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

girl sexual assault

இதனிடையே துர்கா பூஜைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய பெண்ணை 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.