“அம்மாவ சந்தோஷப்படுத்த இந்த சினிமாவையே கையில எடுத்தேன்..” ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட மாஸ் தகவல்.. – முழு வீடியோ இதோ..

அம்மாவுக்காக செய்த காரியம் குறித்து ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல் - Raghava Lawrence about his mother | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தமிழ் புத்தாண்டு ப்[பண்டிகை திரைப்படமாக வெளியான திரைப்படம் ‘ருத்ரன்’. கதிரேசன் தயாரித்து இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ப்ரியா பவானி ஷங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தை ரசிகர்கள் அமோகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அப்படத்தின் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில்.

"ஒருநாள் நான் எங்க அம்மா வ சினிமாக்கு கூப்டு போயிருந்தேன். அதுல மூன்று டான்ஸ் மாஸ்டர் பேர் வரும்.  அம்மா பார்த்து படிக்கறதுக்குள்ள பேர் போயிடுச்சு.. 'எங்கப்பா உன் பேரையே கானோம்.' அப்படினு சொன்னாங்க.. நான் 'வந்து போயிடுச்சு மா' அப்படினு சொன்னேன்.'என்னப்பா 3 மணி நேரம் வந்து உட்காந்துருக்கோம். உன் பேரை கொஞ்சம் தான் போடுறாங்க' அப்படினு அம்மா சொன்னாங்க.. அப்ப முடிவு பண்ணோம்.. இந்த சினிமாவையே நம்ம கைல எடுத்தா எப்படி இருக்கும்.. அம்மா வ சந்தோஷப்படுத்துனா எப்படி இருக்கும்.. னு நினைச்சேன்" என்றார் ராகவா லாரன்ஸ்.மேலும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகள் குறித்து, "முதியோர் இல்லத்துக்கு அனுப்புறவங்கள் மனிதர்களே இல்லை னு தான் சொல்வேன். சின்ன வயசுல நம்ம அம்மாவுக்கு பாரமா இருந்தோம் னா.. அம்மா நம்மள அநாதை இல்லத்தில் சேர்த்தா நம்ம நிலைமை என்ன ஆகிருக்கும்.. கொலை பன்றதுக்கு எவ்ளோ பெரிய தண்டனை தராங்களோ அம்மா அப்பாவ முதியோர் இல்லத்தில் விடுறவங்களுக்கும் அந்த தண்டனை தரனும்.. நீங்க எங்க போனாலும் கடவுள பாரக்க முடியாது.. யாரும் கடவுளை பார்த்ததாக சரித்திரமே இல்லை.. கடவுளை உணரதான் முடியும். கடவுளை உங்களால் பார்க்க முடியுதுனா அது தாய் தகப்பனாக தான் இருக்க முடியும்"  என்றார் ராகவா லாரன்ஸ் பின் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களின் அம்மா சிறப்பு வீடியோ மூலம் நிகழ்ச்சியில் வருகை தந்தார். அதில் அவர்,  " சந்திரமுகி படம் னா எனக்கு அவ்ளோ பிடிக்கும். அந்த படத்தில் என் மகன் நடிக்குற செய்தி தெரிந்ததும். உற்சாகத்தில் கத்திட்டேன்.. ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. கோவில் கட்றது பத்தி எதுவும் சொல்லல.. ஒருநாள் என்ன கூப்டு ஒரு போட்டோ எடுத்தார்.‌ நான் ஏன்னு கேட்டும் சொல்லல.. ஓருநாள் கோவிலுக்கு கூப்டு போட்டார். எனக்கு சிலை திறந்து காட்டினதும் எனக்கு மனசு படபடனு ஆயிடுச்சு..  இதுபோல யாருக்கும் கிடைக்காது.. எந்த பிள்ளையும் செய்யாதது என் பிள்ளை செஞ்சிருக்கு.. " என்றார் ராகவா லாரன்ஸ் அவர்களின் தாயார்.

மேலும் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் ரசிகர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..

உருவாகிறது KGF 3… அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

உருவாகிறது KGF 3… அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..

ரசிகர்களின் ஆரவாரத்துடன் மேடையை அதிர வைத்த ராகவா லாரன்ஸ்... அட்டகாசமான வீடியோ உள்ளே..
சினிமா

ரசிகர்களின் ஆரவாரத்துடன் மேடையை அதிர வைத்த ராகவா லாரன்ஸ்... அட்டகாசமான வீடியோ உள்ளே..

ரசிகர்களின் ஆரவாரத்துடன் மேடையை அதிர வைத்த ராகவா லாரன்ஸ்... அட்டகாசமான வீடியோ உள்ளே..
சினிமா

ரசிகர்களின் ஆரவாரத்துடன் மேடையை அதிர வைத்த ராகவா லாரன்ஸ்... அட்டகாசமான வீடியோ உள்ளே..