ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்த்து நிற்கும் திரைப்படமாக வரும் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இருந்து வருகிறது. பல தசாப்தங்களாக முயற்சி செய்யப்பட்டு இயக்குனர் மணிரத்தினம் அதை சாத்தியமாக்கினார். இரு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை உலகளவில் பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன் முதல் பாகம். இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே அணி திரண்டு நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திற்கு தனி எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ் சினிமாவை தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கான இறுதிகட்ட விளம்பர பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த சியான் விக்ரம் அவர்கள் திரிஷா, ஜெயம் ரவியுடன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் கார்த்தி, ஜெயம் ரவி யுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதில் தனி சிறப்பு என்னவென்றால் பொன்னியின் செல்வன் நாவலில் உடன்பிறப்புகளான ஆதித்ய கரிகாலன் (சியான் விக்ரம்), குந்தவை (திரிஷா), அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) ஆகியோர் சந்திக்கும் புகைப்படமாக சியான் விக்ரம் அதனை பகிர்ந்து உள்ளார்.
முதல் பாகத்தில் இந்த மூவரும் ஒரே நேரத்தில் சந்தித்ததே இல்லை. பார்வையாளர்களும் இந்த மூவரின் சந்திப்பும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இந்த மூவரும் ஒரே இடத்தில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு மேலும் ஆவலை தூண்டி உள்ளது. பொன்னியின் செல்வன் நாவலில் நிறைய மாற்றங்களை மணிரத்தினம் திரைப்படத்திற்காக மாற்றியுள்ளார். அதன்படி இந்த மூவரின் சந்திப்பு இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரசிகர்கள் தற்போது சியான் விக்ரம் அவர்கள் பதிவிட்ட புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
Siblings 3.
— Vikram (@chiyaan) April 25, 2023
Onscreen X Offscreen tri’mistry. 💛💛💛 #PS2@actor_jayamravi @Karthi_Offl @trishtrashers pic.twitter.com/BTmCYsRSPi