வாவ்..கணவனின் 2வது திருமணத்திற்கு வந்த முதல் மனைவி!அடித்து உதைத்துப் பந்தாடியதால் பரபரப்பு..
By Arul Valan Arasu | Galatta | 01:48 PM
கணவனின் 2 வது திருமணத்திற்கு வந்த முதல் மனைவி, மணமேடையிலேயே கணவனை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சாமிலி மாவட்டத்தைச் சேர்ந்த பங்கஜ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மஞ்சு என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மனைவி மஞ்சுவுக்குத் தெரியாமல், அப்பகுதியில் உள்ள திட்சாரி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை, பங்கஜ் குமார் 2 வதாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.
திட்டமிட்ட முகுர்தத்தின்படி, பங்கஜ் குமாருக்கு குறிப்பிட்ட இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது. மணமக்கள் இருவரும் அப்போது மணமேடையில் இருந்தனர்.
அப்போது, அந்த திருமண விழாவிற்கு வந்த பங்கஜ் குமாரின் முதல் மனைவி மஞ்சு, நேராக மணிமேடைக்குச் சென்றார். மஞ்சுவைப் பார்த்ததும், பங்கஜ்குமார் நடுங்கி பயத்தில் உரைந்துபோனார். இதனையடுத்து, கணவன் என்றுகூடப் பார்க்காமல், மணமேடையிலேயே கணவனை அடித்து, உதைத்துப் பந்தாடினார்.
இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீசார் விரைந்து வரவே, பங்கஜ் குமாரை போலீசாரிடம் மஞ்சு ஒப்படைத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, பங்கஜ் குமாருக்கு எதிராக மீரட் நகர் காவல்நிலையத்தில், வரதட்சணை மற்றும் குடும்ப பிரச்சனை ஒன்றும் நிலுவையில் இருப்பதாகவும் மஞ்சு தெரிவித்தார்.
இதனிடையே, கணவனுக்கு 2 வது திருமணம் நடைபெறுவதை அறிந்து, துணிச்சலுடன் முதல் மனைவி நேரில் வந்து மணமேடையிலேயே கணவனை அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.