கடந்த 2008-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதைத்தொடர்ந்து அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து அசத்தினார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்தார் சமீரா. இந்த அழகான தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து லாக்டவுன் நேரத்தில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி ஒரு பாலிவுட் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு அதிர்ச்சிகர விஷயங்களை கூறியிருக்கிறார். நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். திடிரென அதில் முத்தக்காட்சி சேர்க்கப்பட்டிருக்கிறது என்று என்னிடம் சொன்னார்கள். அது எனக்கு முன்பே கூறப்படவில்லை, அதனால் அது எனக்கு ஓகே இல்லை என கூறினேன். 

நீங்கள் முன்பே முசாஃபிர் படத்தில் முத்த காட்சியில் நடித்தீர்களே என கூறி என்னை ஒப்புக்கொள்ள வைக்க நினைத்தார்கள். அதில் நடித்தேன் என்பதற்காக நான் மீண்டும் மீண்டும் அதுபோல நடிப்பேன் என்று அர்த்தம் இல்லை என கூறினேன். அதற்குப் பிறகு அவர் இதை பத்திரமாக கையாளுங்கள், உங்களுக்கு பதில் வேறு ஒருவரை மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' எனக் கூறினார்கள் என சமீரா ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஒரு பாலிவுட் ஹீரோ தன்னிடம் காஸ்டிங் கவுச் விஷயத்தைப் பற்றி நேரடியாகவே கூறியதாக தெரிவித்துள்ளார். சமீரா உங்களை அணுகவே முடியவில்லை எனக்கூறிய அந்த நடிகர், You are no fun என்று கூறினார். உங்களுடன் மீண்டும் பணியாற்ற விரும்புவேணா என்று கூட தெரியவில்லை என்றும் கூறினார். அதற்கு பிறகு நான் அந்த ஹீரோவுடன் பணியாற்றவே இல்லை என சமீரா ரெட்டி கூறியிருக்கிறார்.

சினிமா துறையில் பல வருடங்களாக நடந்து வரும் விஷயம் இது தான் எனக் கூறும் சமீரா, இந்த கேம் பரமபத விளையாட்டு போன்றது தான். இது போன்ற பாம்புகளை தாண்டி உங்களது பயணம் எப்படி தொடர்வது என்பதை நீங்கள் அறிய வேண்டும். நான் ஷுட்டிங் முடிந்த பிறகு எந்த நடிகருடனும் பார்ட்டிக்கு செல்ல மாட்டேன். அதற்கு பதில் நான் வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பேன். நான் யாருடனும் நெருங்கிப் பழகுவது இல்லை. அப்படி செய்திருந்தால் அதிக அளவு படங்கள் கிடைத்திருக்கும். பரவாயில்லை இந்த பிசினஸ் அப்படித் தான் என்றும் வெளிடையாக போட்டுடைத்தார்.