மனைவியைப் பழிவாங்கும் நோக்கில் அவள் தங்கையை வன்புணர்வு செய்து கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள நொய்டா பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, காசனா பகுதியில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டிற்கு கடந்த வாரம் சென்றுள்ளார்.

Man rapes

இந்நிலையில், சிறுமியின் அக்காவிற்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்டை நடந்துள்ளது. இதில், இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றவே, மனைவியைப் பழிவாங்கும் நோக்கத்தோடு, “உனக்குப் பாடம் புகட்டுகிறேன் பார்” என்று வீர வசனங்கள் பேசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

அதேநேரத்தில், அக்கா வீட்டிலிருந்த 11 வயது சிறுமியும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் அக்கா, பதறிப்போய் “கணவருடன், தனது 11 வயது தங்கையையும் காணவில்லை” என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Man rapes

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் தீவிரமாகத் தேடிவந்தனர். இதனிடையே, நேற்று இரவு அப்பகுதியில் உள்ள முட்புதரில் சிறுமி ஒருவர் சுயநினைவில்லாமல் காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது, அது காணாமல் போன 11 வயது சிறுமி என்பதை உறுதி செய்தனர். மேலும், சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனைத்தொடர்ந்து, குற்றச் செயலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி, வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.