தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிகிறது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 2 மாவட்டங்களா பிரிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டமும் நெல்லை, தென்காசி என இரண்டு மாவட்டங்களா பிரிகிறது.

new districts formation

அதேபோல், வேலூர் 3 மாவட்டங்களாகப் பிரிகிறது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாகப் பிரிகிறது. இந்நிலையில், புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அத்துடன், வேலூர் மாவட்டத்தில் புதிதாக வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது சேர்க்கப்பட்டதுள்ளது. அதேபோல், வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், அணைக்கட்டு, காட்பாடி, என 5 தாலுக்காகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டாறம்பள்ளி, ஆம்பூர், என 4 தாலுக்காகளும், திருப்பத்தூர், வாணியம்பாடி என 2 வாருவாய் கோட்டங்களும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டன.

new districts formation

மேலும், வாலாஜா, நெமிலி, ஆற்காடு, அரக்கோணம் என 4 தாலுக்காகள் உருவாக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 வாருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

நெல்லை, சேரன்மகா தேவி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை,  நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, மானூர் என 8 தாலுக்காகள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை, சேரன்மகாதேவி, என 2 வாருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.

தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம், சிவகிரி, திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர், தென்காசி என 8 தாலுக்காகள் உருவாக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கோட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.