"தாய் காவேரிக்கு தான் எந்த மாநிலம் என தெரியாது!"- காவேரி பிரச்சனை குறித்து சத்குரு கருத்து! விவரம் உள்ளே

மீண்டும் பூதாகரமாய் வெடித்திருக்கும் காவிரி பிரச்சனை தொடர்பாக சத்குரு அவர்கள் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடகாவில் மிகப்பெரிய போராட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. கன்னட அமைப்புகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இதனால் இரு மாநில எல்லைகளில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே காவேரி நதி 12 மாதங்களும் வற்றாமல் பாய ஒரே வழி 83000 சதுர கிமீ பரப்பளவு கொண்ட காவேரி வடிநிலப் பகுதியில் பெரிய அளவில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுப்பதே என்று காவேரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சனை குறித்து சத்குரு அவர்கள் கூறியுள்ளார். மரம் சார்ந்த விவசாயம் என்பது, மரங்களுக்கு இடையே பயிர் செய்வதும், வரப்பு ஓரங்களில் மரங்களை பயிரிடும் முறை ஆகும். குறிப்பாக டிம்பர் மரங்களை அதிக அளவில் நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் பலன்களோடு, விவசாயிகளுக்கு பொருளாதார பலன்களையும் இம்முறை அள்ளித் தரும். 

விவசாய நிலங்களில் அதிக அளவில் மரங்களை நடுவதன் மூலம் மண்ணின் தரமும், மண்ணின் நீர்பிடிக்கும் திறனும் மேம்படுகிறது. இதன் மூலம் மழைப் பொழிவு காலங்களில் அதிக படியான நீரினை பூமிக்குள் சேமிக்க முடியும். இதனை காவேரி வடிநிலப் பகுதியாக சொல்லப்படும் 83000 சதுர கிமீ பரப்பளவில் முறையாக செயல்படுத்தப்படும் போது, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சிற்றோடைகளும், கிளை நதிகளும் புத்துயிர் பெற்று  காவேரி ஆறு வற்றாமல்  ஜீவ நதியாக ஆண்டு முழுவதும் பாயும். இதனை வலியுறுத்தியே காவேரி கூக்குரல் இயக்கத்தை சத்குரு அவர்கள் துவங்கினார். இவ்வியக்கம் தமிழக - கர்நாடக மாநிலங்களில் இருக்கும் காவேரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் பரவலாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பயிற்சி வகுப்புகள், மானிய விலையில் மரக்கன்றுகள் வினியோகம் என பல்வேறு செயல்களை செய்து வருகிறது. மேலும் இவ்வியக்கத்தின் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தோராயமாக 4.85 கோடி மரக் கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து காவிரியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் சத்குரு அவர்கள் தற்சமயம் நடைபெற்று வரும் காவேரி பிரச்சனை தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து சத்குரு அவர்கள் தனது  X தளத்தில்  "காவேரி தாய்க்கு நாம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது, ஆனால் கோடைக்காலத்தில் குறைந்து போதல் மற்றும் வறண்டு போவதால் அவதியுறுகிறாள். 83000 சதுர கிமீ பரப்பு கொண்ட காவேரி வடிநிலப் பகுதியில் பெரிய அளவில் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் தாவரங்களை வளர்ப்பது மட்டுமே காவேரி வருடத்தில் 12 மாதங்களும் மிகுதியாக பாய ஒரே வழி. வறண்டு கிடக்கும் தண்ணீருக்காக போராடுவதை விட காவேரி தாயை வலுப்படுத்தி மேம்படுத்துவோம். ஞானம் மேம்படட்டும்." என்று பதிவு செய்துள்ளார். காவேரி பிரச்சினை தொடர்பாக சத்குரு அவர்கள் பதிவிட்ட அந்த பதிவு இதோ… 

Mother Cauvery does not know which state we belong to but she is suffering with depletion and drying up during the summer months. Bringing large scale tree based agriculture and vegetating the 83,000 sq kms of Cauvery basin is the only way Cauvery will flow 12 months of the year…

— Sadhguru (@SadhguruJV) September 29, 2023

Leave a Comment