12 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை, 4 பேர் சேர்ந்த கும்பல் வழிமறித்துள்ளனர். 

Haryana four youths sexual assault on twelve year old girl

இதனையடுத்து, அந்த சிறுமியை அங்கிருந்து மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்ற அந்த கும்பல், சிறுமியை அடித்துத் துன்புறுத்தி மாறி மாறி  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அவர்களிடமிருந்து மீண்டு வந்த சிறுமி, பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து, சிறுமியை அழைத்துக்கொண்டு, அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், வழக்குப் பதிவு செய்தனர்.

Haryana four youths sexual assault on twelve year old girl

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் பலாத்கார பயத்தில் உரைந்துபோய் உள்ளனர்.