துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பெரும்பாலான மக்கள் மருத்துவமனை பக்கம் செல்வதற்கே பயந்து, மெடிக்கல் ஷாப்பில் மருத்து மாத்திரிகளை வாங்கி சாப்பிட்டும், வீட்டிலேயே கை வைத்தியம் போன்ற மருத்துவ முறைக்கும் திரும்பி உள்ளனர். 

Deputy CM  O.Panneerselvam admitted to hospital

இந்நிலையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை திடீரென்று சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் பரிசோதனை தான் என்றும், இன்று  மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. 

Deputy CM  O.Panneerselvam admitted to hospital

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக, முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் உடன் சென்றனர்.

அப்போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாக, மருத்துவமனை தரப்பில் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பரிசோதனைகளை முடித்து, வீடு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.