காதலா? காமமா? 15 வயது சிறுமியைப் பார்க்கும்போதெல்லாம் பலாத்காரம் செய்த காதலன்!
By Arul Valan Arasu | Galatta | 07:48 PM
சென்னை மெரினா கடற்கரையில் 15 சிறுமியைப் பார்க்கும்போதெல்லாம் காதலன் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம் பலமலை நாதர் நகரைச் சேர்ந்த 22 வயதான அன்பழகன், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்துள்ளார்.
அப்போது, அந்த கடைக்குச் சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும், 15 வயது மாணவி ஒருவர் பொருள் வாங்கும்போது, அன்பழகனுடன் அறிமுகமாகி உள்ளார். இதனையடுத்து, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
சிறுமியை அடிக்கடி மெரினாவிற்கு வரவழைக்கும் அன்பழகன், சிறுமியைச் சந்திக்கும்போதெல்லாம் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, சிறுமியைப் பலமுறை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இப்படியாக உல்லாச பறவையாகச் சுற்றிய அவர்கள், வீட்டைவிட்டு வெளியே முடிவு செய்தனர். அதற்காக, அன்பழகன் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, “நீ வீட்டை விட்டு வா, என் சொந்த ஊரிக்குச் சென்று திருமணம் செய்துகொண்டு, நாம் சந்தோசமாக வாழலாம்” என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனை நம்பி, அந்த சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறி, அன்பழகன் சொன்னது போல் வந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியை ஆசை தீர மெரினா கடற்கரையில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு, எழும்பூர் ரயில் நிலையம் அழைத்து வந்துள்ளார்.
அங்கு, இருவரும் ரயிலுக்காகக் காத்திருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் பார்த்துச் சந்தேகப்பட்டு, தனித்தனியாக அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, அவரை பலமுறை அந்த இளைஞன் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்த அதிகாரிகள், அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, பின்னர் அங்குள்ள தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.