ஐடி ஊழியரான கணவனை, உயிருடன் வைத்து மனைவியே எரித்துக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஜாக்டியல் மாவட்டத்தில் உள்ள பல்வந்தபூர் பகுதியைச் சேர்ந்த ராச்சார்லா பவன் குமார், தனது மனைவி கிருஷ்ணவேனி உடன் வசித்து வந்தார். ராச்சார்லா பவன் குமார், அங்கு சாப்ட்வேர் இன்ஜினீயரானக பணியாற்றி வந்தார்.

இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், ராச்சார்லா பவன் குமார், கடந்த 23 ஆம் தேதி திடீரென்று உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து, அங்குள்ள ஜாக்டியல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதாவது, “ராச்சார்லா பவன் குமாரின் மனைவியான கிருஷ்ணவேனியின் உறவினரான சுமலதா என்பவர், பவன் குமாரைத் தகனம் செய்ததாக” காவல் நிலையத்தில் அவரது மனைவி கிருஷ்ணவேணி, பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ராச்சார்லா பவன் குமார் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.

முக்கியமாக, ராச்சார்லா பவன் குமாரின் மனைவி, கிருஷ்ணவேனிக்கும் அவரது கொலையில் தொடர்புள்ளது என்று, போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த கொலை வழக்கு குறித் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடி கிஷோர், “கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கிருஷ்ணவேனி, அலிதாபாத் பகுதியில் தனது உறவினரின் திருமணத்திற்குச் சென்று உள்ளார். அப்போது, அங்கு அவர் அணிந்திருந்த 60 கிராம் எடை கொண்ட தங்க நகை திருட்டு போய் உள்ளது. இதனால், பவன் குமார் மனைவியிடம் அவர் அடிக்கடி சண்டையிட்டு வந்து உள்ளார். 

மேலும், அவரது மைத்துனரான ஜெகன் தான், இந்த நகைகளைத் திருடியிருப்பார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரைக் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியிருக்கிறார். ஆனால், ஜெகன் சமீபத்தில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்த நிலையில், பல்வந்தபூர் புறநகர் பகுதியில் மஞ்சுநாதா கோயிலில் தங்கி ஆசிரமம் ஒன்றை நடத்திவரும் கிருஷ்ணவேனியின் சகோதரர் விஜயசாமி, தனது குடும்ப உறுப்பினர்களிடம் பவன் குமார் வைத்த சூனியத்தால் தான் ஜெகன் இறந்துள்ளதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறார்.

இதனை நம்பி குடும்பத்தினர் பவனைக் கொலை செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் மனைவி கிருஷ்ணவேனி, விஜயசாமி உடன் கிருஷ்ணவேனியின் உறவினர் சுமலதா, சகோதரி ஸ்வரூபா, தாய் பரிமலா ஆகியோர் இந்த கொலை கூட்டுச் சதியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து, இந்த கொலையை நடத்த திட்டமிட்டு உள்ளனர். திட்டமிட்டபடி, ஜெகனின் 12 ஆம் நாள் சடங்கில் கலந்துகொண்ட பவன் குமார், ஜெகனின் ஆத்மாவிற்கு மஞ்சுநாதா கோயிலுக்கு அருகிலிருந்த ஒரு அறையில் மரியாதை செலுத்திக் கொண்டிருந்து உள்ளார். அப்போது, அந்த அறையின் கதவைத் வெளிப்புறமாக தாப்பால் போட்டு மர்ம நபர்கள் சிலர் பூட்டு போட்டு உள்ளனர்.

அதன் பிறகு, கிருஷ்ணவேனியின் நெருங்கிய உறவினர்களும், கொண்டகட்டு பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் ரெட்டி என்ற இளைஞரும் சேர்ந்து அறையின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளனர். இதில், பவன் குமார் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டார். இதில், பவன் குமார் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், பவன் குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கங்காதர் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணவேணியின் குடும்பமே சேர்ந்து பவன் குமாரை திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, மனைவி கிருஷ்ணவேனியுடன் சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீதும், நிரஞ்சன் ரெட்டி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 

இதனிடையே, மனைவியே கணவரை உயிருடன் எரித்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.