சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாடோடிகள். இதன் வெற்றியை தொடர்ந்து நாடோடிகள் 2 சமீபத்தில் வெளியானது. இதில் சசிகுமாருடன், அஞ்சலி, அதுல்யா, பரணி ஆகியோர் நடித்திருந்தார். நந்தகோபால் இந்த படத்தை தயாரித்தார்.

.

U/A சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்தார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டார். முதல் பாகம் போல் இதன் இரண்டாம் பாகம் அமையவில்லை. பெரிதளவில் ஏமாற்றமடைந்தனர் திரை விரும்பிகள். விமர்சன ரீதியாகவும் சேதமடைந்தது நாடோடிகள் 2.

.

தற்போது படத்திலிருந்து வருங்காலம் எங்களது பாடல் வீடியோ வெளியானது. லோகன், அறிவு, காணா உலகம் தாரிணி மற்றும் இசைவாணி பாடியுள்ள இந்த பாடல் வரிகளை லோகன் மற்றும் அறிவு எழுதியுள்ளனர்.

.