2017 தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் மெர்சல்.தளபதி விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.அட்லீ இந்த படத்தை இயக்கியிருந்தார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

.



இந்த படம் பெரிய வெற்றி அடைந்திருந்தாலும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு இது தோல்வி படம் என்று பலரும் கூறி வந்தனர்.இதனால் தான் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவிருந்த தனுஷ் படம்,இரவக்காலம் உள்ளிட்ட படங்கள் கிடப்பில் போடப்பட்டன என்றும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவின.



சில வருடங்கள் கழித்து தற்போது ஒரு பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்த படத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமி இது குறித்து விளக்கமளித்துள்ளார்.மெர்சல் எங்களுக்கு தோல்வி படம் இல்லை எனக்கு வேறு சில பிரச்சனைகள் இருந்ததால் தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.விஜயுடன் 10 நாட்களுக்கு முன்பு கூட பேசினேன், சன் பிக்சர்ஸ் படத்திற்கு பிறகு நாங்கள் மீண்டும் இனைய வாய்ப்பிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

.