ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் அரசி உள்ளிட்ட பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.

அதுபோலவே, இந்தாண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இதற்காக, தமிழக அரசு 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதனிடையே. சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி ரேஷன் அட்டைதாரர்களாக மாறி வருகின்றனர். இந்நிலையில், இதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.