நண்பனின் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனைப் பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 27 வயதான கார்த்தி, தனது சக நண்பரைக் காணச் சென்றுள்ளார். அப்போது, நண்பர் வீட்டில் இல்லாத நிலையில், நண்பரின் சிறுவயது பெண் குழந்தை, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது.

இதில், சபலப்பட்ட கார்த்திக், நண்பரின் மகளைத் தனிமையில் தூக்கிச் சென்றதாகத் தெரிகிறது. நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர்கள், குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். மேலும், மாயமான குழந்தையை அப்பகுதி மக்களே சேர்ந்து தேடி உள்ளனர்.

அப்போது, எங்கிருந்தோ கார்த்திக் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து, ஊர்மக்கள் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். அதற்கு அவர் மழுப்பலாகப் பதில் அளிக்கவே, ஊர் மக்கள் சேர்ந்து, தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது, அவர் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, கார்த்திகை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து துவைத்து எடுத்தனர்.

இதில், படுகாயம் அடைந்த அவருக்கு பல்வேறு இடங்களில் ரத்தம் வந்தது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், கார்த்திக்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞரை ஊர் மக்களே சேர்ந்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.