வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவனின் பிறப்புறுப்பை அறுத்து, மனைவி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை சீட்டாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ரஞ்சித் குமார், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், வீட்டு வாசலில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த அவரை, அடையாளம் தெரியாத ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு, அவரது பிறப்புறுப்பையும் அறுத்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், ரஞ்சித் குமார், தனது மனைவி சுபாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாகப் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில், ரஞ்சித் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது மனைவி சுபா, அதே பகுதியைச் சேர்ந்த பாப்ளி, பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரை ஏவி விட்டு, கணவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சுபா உட்படக் கொலையில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மதுரையில் கணவரின் பிறப்புறுப்பை அறுத்து மனைவியே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.