பாடிபில்டிங்கில் மயங்கிய மருத்துவ மாணவியை ரூம் போட்டு பலாத்காரம் செய்த பிறகு கலட்டிவிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ள வர்க்கலா பகுதியைச் சேர்ந்த 23 வயதான ராகுல், பாடிபில்டிங்கில் பல்வேறு பதக்கங்களை வென்று புகழ் பெற்றுத் திகழ்ந்தார். அதுபோல், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பெங்களூரில் தங்கி எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

இந்நிலையில், ராகுலின் பாடிபில்டிங்கில் மயங்கிய அந்த மருத்துவ மாணவி, அவரிடம் காதல் வசமானார். இதனையடுத்து, இருவரும் காதலிக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து, இருவரும் பல்வேறு இடங்களுக்கு சேர்ந்து ஊர் சுற்றத் தொடங்கினர். இந்நிலையில், அந்த மருத்துவ மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, சமீபத்தில் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ரூம் போட்டு, அந்த மாணவியை ராகுல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த மாணவியும், தன்னை ராகுல் திருமணம் செய்துகொள்வார் என்று நம்பி, தன்னையே அவரிடம் இழந்துள்ளார். இதனையடுத்து, அந்த மாணவியிடமிருந்து பணம் மற்றும் நகைகளை ராகுல் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, யாரிடமும் எதுவும் சொல்லாமல் ராகுல் திடீரென்று கத்தார் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு, அந்த மாணவி ராகுலுக்கு போன் செய்தும், அந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்று வந்துள்ளது. இது குறித்து, அந்த பெண் விசாரிக்கையில், ராகுல் கத்தார் நாட்டிற்குச் சென்றது தெரியவந்தது.

அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டது அந்த மருத்துவ மாணவிக்குத் தெரியவந்தது, இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றி ராகுல் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகப் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, ராகுல் நேற்று அங்குள்ள வர்க்கலா பகுதிக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்