தாறுமாறாக ஓடிய மினி பேருந்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்ற ஏராளமான மாணவிகள் தற்போது வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, மின்னல் வேகத்தில் வந்த மினி பேருந்து, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதில், சாலையில் நடந்து சென்ற பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த பல மாணவிகள் மீது பேருந்து திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சுமார் 10 க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, படுகாயம் அடைந்த மாணவிகளை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, விரைந்து வந்த மார்த்தாண்டம் போலீசார், வழக்குப் பதிவு செய்து பேருந்தின் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.