பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த டியூசன் மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஏராளமான பெண் குழந்தைகள் தங்கிப் படித்து வருகிறார்கள்.

இந்த காப்பகத்தில் தினமும் மாலை நேரங்களில், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், சிறப்பு வகுப்பு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று டிஷன் எடுத்துக்கொண்டிருந்த ஆனந்த், மற்ற மாணவிகளுக்கு பொதுவான இடத்தில் அமர வைத்து பாடம் சொல்லித் தந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட 10 வகுப்பு மாணவிக்கு மட்டும் பொதுத் தேர்வு என்று சொல்லி, தனியாகப் பாடம் சொல்லிக்கொடுக்க முயன்றார்.

அப்போது, பாடம் சொல்லித் தருவதுபோல், சில ஆசைவார்த்தைகள் கூறி, மாணவியிடம் தகாத முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டு, மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனால், பயந்துபோன மாணவி, கத்தி கூச்சலிட்டதால், அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டனர்.

மேலும், ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, காப்பாக உரிமையாளர் மீனா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.