பிரபல மாடல் ஆக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகையாக கலக்கி வருபவர் ஷபானா.விளம்பர படங்களில் நடித்து கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக விஜயதசமி என்ற மலையாள தொடரில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் ஹீரோயினாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் ஷபானா.பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் ஷபானா.இந்த சீரியல் வெகு விரைவில் முடிவடையுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் தனது காதலரான சீரியல் நடிகர் ஆர்யன் என்னும் வேலு பிரபாகரனை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் பகையே காத்திரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இவர் ஹீரோயினாக நடித்து வரும் செம்பருத்தி தொடரின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது,இதன் இறுதி அத்தியாயம் வரும் ஜூலை 31ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.இதுகுறித்து ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து மிஸ் செய்வதாக பகிர்ந்துள்ளார்.ரசிகர்களும் இவரையும் இந்த சீரியலையும் மிஸ் செய்வோம் என பதிவிட்டு வருகின்றனர்.