திருமணமாகி 6 மாசத்தில் முதலிரவு நடக்காததால், குடும்பமே போலீசில் புகார் அளித்துள்ளது.

விருதுநகர் கட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணனுக்கும், திருநெல்வேலி சத்திரத்தைச் சேர்ந்த பானுவுக்கும் கடந்த ஜீன் மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, பெண் வீட்டார் திருமண சீர் என்று நகைகள், பணம், பொருள் என்று நிறையச் செய்துள்ளனர்.

Viruthunagar wife waiting for the first night for 6 months

இந்நிலையில், திருமணம் நடந்தது முதல் தற்போது வரை 6 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை மாப்பிள்ளைக்கும் - பெண்ணுக்கும் இடையே முதலிரவு நடக்கவில்லை. 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெண், தன் நிலை பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து, பெண் வீட்டார் நேரில் வந்து, மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டுள்ளனர்.

Viruthunagar wife waiting for the first night for 6 months

அதற்கு, மாப்பிள்ளை வீட்டார், “எத்தனையோ தம்பதியினர் ஆண்டுக் கணக்கில் முதலிரவே இல்லாமல் இருக்கிறார்கள். இது ஒரு பிரச்சனையா” என்று கிண்டலாகக் கேட்டுள்ளனர். அத்துடன், கோபப்பட்ட மாப்பிள்ளை சரவணன், “ என் தந்தைக்காகத் தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன். வேண்டுமானால், நீ அவருடன் உல்லாசம் அனுபவித்துக்கொள். என்னைத் தொந்தரவு செய்யாதே” என்று பெண்ணை அவர் வீட்டார் முன்பே அசிங்கமாகப் பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.  

Viruthunagar wife waiting for the first night for 6 months

இது தொடர்பாக, இரு வீட்டார் இடையே கடும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து, பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சரவணன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.