சிறுமி என்றுகூட பாராமல் அண்ணன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள  பூவை மாநகரைச் சேர்ந்த 36 வயதான ராமநாதன், திருமணம் ஆன நிலையில், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குன்னூரில் தங்கி பணியாற்றி வந்தார்.

sexual assault

இந்நிலையில், தனது சொந்த ஊரான பூவை மாநகருக்கு அடிக்கடி வந்து செல்லும் அவர், தனது அண்ணன் வீட்டில் தங்குவது வழக்கம். அங்கு, தனது அண்ணனின் சிறு வயது பெண் குழந்தையைக் கொஞ்சுவதுபோல், அந்த பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அண்ணன் மகள் என்று கூட பாராமல், சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார்,  ராமநாதனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, ராமநாதன் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

sexual assault

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.